KKR vs RR : ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடாத என்னை நம்பி ஏலம் எடுத்த ராஜஸ்தான் அணிக்கு நன்றி – ஆர்ச்சர் உருக்கம்

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமை

Archer
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Smith

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 97 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 176ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 31 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். மேலும், ஆர்ச்சர் 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 27 ரன்களை குவித்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் வருண் ஆரோன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Archer-1

போட்டி முடிந்து பேசிய ராஜஸ்தான் அணியின் வீரர் ஆர்ச்சர் பேசுகையில் : கடைசி ஓவரில் பந்து பேட்டில் படவே நான் விரும்பினேன். இந்த போட்டி ராஜஸ்தான் அணி வீரராக எனக்கு எப்போதும் நியாபமிருக்கும். நான் நம்புகிறேன் ராஜஸ்தான் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும். யார் என்னுடைய இடத்தில் ஆடினாலும் அவர்கள் சிறப்பாகவே ஆடுவார்கள் என்று நம்புகிறேன்.

Archer

நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவதில் பெருமை அடைகிறேன். ஏனெனில், ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடாத என்னை அவர்கள் நம்பி ஏலம் எடுத்தார்கள். அவர்களுக்காக எப்போதும் சிறப்பாக ஆட விரும்புகிறேன். என்னை நம்பி என்னை அணியில் தேர்வு செய்து பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார்கள் எனவே ராஜஸ்தான் அணிக்கு நன்றி என்று ஆர்ச்சர் கூறினார்.

Advertisement