இருந்த ஒரே நல்ல பிளேயருக்கும் காயமா ? ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

rr
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு காரணமாக தற்போது பதிமூன்றாவது சீசனாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ள நிலையில் இப்போதே அதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Archer

- Advertisement -

அனைத்து இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தயாராகி வரும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த பல தொடர்களாக சீசன்களாக கஷ்டப்பட்டு வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறையாவது கைப் கோப்பையை கைப்பற்றி விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் முதல் சீசனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதற்கடுத்து சரியான வீரர்கள் அமையாததால் அந்த அணி இதுவரை தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது. தற்போது மேலும் சரிவாக மற்றொரு வீரரும் விலகி உள்ளார்.

rr 1

அதன்படி இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார். முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் இங்கிலாந்து அணி நிர்வாகம் அவரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

- Advertisement -

அதன்படி இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் விளையாடுவது தற்போது சந்தேகமாகியுள்ளது. மேலும் அவர் ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து இன்னும் சில வாரங்கள் ஓய்வெடுக்கவேண்டும் என்பதால் அவர் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது சந்தேகம்தான்.

Archer

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதால் அந்த அணி மேலும் சிக்கலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement