6 மாசம்.. சம்பள பாக்கியை எப்போ தருவீங்க? அதை மீறியதால் தரமுடியாது.. கில்லஸ்பிக்கு பாக் வாரியம் பதிலடி

Jason Gillespie
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீப காலங்களாகவே பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதை சரி செய்வதற்காக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்பியை பாகிஸ்தான் வாரியம் தங்களுடைய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்தது. ஆனால் அவரது வழி காட்டுதலில் சொந்த மண்ணில் வங்கதேச அணியிடம் வரலாறுகளில் முதல் முறையாக பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் தோற்றது.

மேலும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் கேரி கிறிஸ்டின் வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவியையும் ஜேசன் கில்லஸ்பி ஏற்று வழி நடத்தினார். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் அவரது வழிகாட்டுதலில் பாகிஸ்தான் எந்த வெற்றிகளையும் பெறவில்லை.

- Advertisement -

6 மாசம் ஆச்சு:

இதற்கிடையே அணியை தேர்ந்தெடுப்பது, திட்டங்களில் உள்ளீடுகளைப் பெறுதல் போன்ற விஷயங்களில் கில்லஸ்பியின் கருத்துக்களை பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஏற்கவில்லை. அந்த வகையில் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியில் அவருக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. அதன் காரணமாக கடந்த 2024 டிசம்பர் மாதத்துடன் ஜேசன் கில்லஸ்பி பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த சூழ்நிலையில் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்து சுமார் 6 மாதங்களாகியும் தமது வேலைக்கான சம்பளப் பாக்கியை பாகிஸ்தான் வாரியம் கொடுக்கவில்லை என்று சமீபத்தில் ஜேசன் கில்லஸ்பி விமர்சித்தார். இது பற்றி பாக் ஃபேஷன் எனும் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “செய்த வேலையில் இருந்து சில ஊதியத்திற்காக இன்னும் நான் காத்திருக்கிறேன்”

- Advertisement -

கொடுக்க முடியாது:

“சரியான சமயத்தில் அதை சரி பார்ப்பேன். இன்னும் அது கிடைக்காதது ஏமாற்றமாக இருக்கிறது. இருப்பினும் அது விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்” என்று விமர்சனம் செய்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் வெளிநாட்டு பயிற்சியாளருக்கு 6 மாதமாகியும் சம்பளத்தை கொடுக்கவில்லையா? என்று பாகிஸ்தான் வாரியத்தை விமர்சித்தார்கள். ஆனால் அந்த விமர்சனங்களை பாகிஸ்தான் வாரியம் மறுத்துள்ளது.

அதாவது விதிமுறைகள் படி தங்களிடம் 4 மாதத்திற்கு முன்பாகவே தெரிவிக்காமல் பதவியை ராஜினாமா செய்ததால் சம்பளப் பாக்கியை கொடுக்க முடியாது என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது. இது பற்றி பாகிஸ்தான் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில். “பாகிஸ்தான் வாரியம் முன்னாள் தலைமை பயிற்சியாளர் தனது நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்று கூறியதை மறுக்கிறது’

இதையும் படிங்க: கொடுத்ததும் அழுதுட்டேன்.. சர்பராஸ் கொடுத்த விராட் பாய் பரிசால் தான் இவ்வளவு வளந்துருக்கேன்.. முஷீர் கான்

“முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் 4 மாத அறிவிப்பு கால அவகாசம் வழங்காமல் திடீரென தனது பதவியை விட்டு வெளியேறினார். அது ஒப்பந்த விதிமுறைகளை மீறும் விஷயமாகும் என்று பாகிஸ்தான் வாரிய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இது இருதரப்புக்கும் பொருந்தக் கூடிய ஒரு அறிவிப்பு என்பதைப் பயிற்சியாளர் அறிந்திருப்பார்” என்று கூறியுள்ளது.

Advertisement