அது மட்டும் நடந்த மூட்டை முடிச்ச கட்ட வேண்டியதுதான். பத்திரிகையாளர் சந்திப்பில் – ஜடேஜா வெளிப்படை

Jadeja-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் மற்றும் 81 பந்துகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்த இந்திய அணியானது ஸ்காட்லாந்து அணியை 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. இந்திய அணி சார்பாக ஜடேஜா மற்றும் ஷமி ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதனை தொடர்ந்து 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரன் ரேட்டை கணக்கில்கொண்டு 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 89 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் போட்டி முடிந்த பிறகு இந்த போட்டி குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜடேஜா கலகலப்பாக தனது பேட்டியினை அளித்திருந்தார்.

அதில் சந்திப்பின் ஒரு கட்டத்தில் ஜடேஜாவிடம் ஆப்கானிஸ்தான் அணியை நியூசிலாந்து வீழ்த்திவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜடேஜா சிரித்துக்கொண்டே :

- Advertisement -

இதையும் படிங்க : இதேமாதிரி நாங்க விளையாடுனா எங்களை யாராலும் தோக்கடிக்க முடியாது – கொக்கரித்த ஜடேஜா

வேறு என்ன மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு ஊருக்கு போக வேண்டியதுதான் என்று கிண்டலாக பதில் அளித்தார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தினால் மட்டுமே இந்தியா அரையிறுதி சுற்று பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement