இந்தியாவில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்தியா முழுவதும் ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் ரசிகர்களிடையே இந்த தொடர்பு பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடருக்கான சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ள முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆன ஜடேஜா கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகடமியில் தனது உடற்தகுதியை உறுதி செய்து சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன இவர் ஒருநாள்,டெஸ்ட், டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக பார்க்கப்படும் ஜடேஜா தற்போது அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஜடேஜா :
Whenever i meet him it feels like i m meeting him for the first time!Still Same excitement when i met him in 2009.#bonding #respectforever pic.twitter.com/Obmh9PIVAR
— Ravindrasinh jadeja (@imjadeja) April 2, 2021
” நான் தோனியை சந்திக்கும்போதெல்லாம் முதன்முறையாக சந்திப்பது போலவே உணர்கிறேன்” 2009இல் நான் அவரை எப்படி சந்தித்தேனோ அதேபோன்ற உற்சாகம் இப்போதும் அவரை சந்திக்கும் போது இருக்கிறது என ட்விட்டர் பக்கத்தில் டோனியுடன் உரையாடும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சென்னை அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டு விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.