வீடியோ : 4 பந்தில் போட்டியின் முடிவை மாற்றி சி.எஸ்.கே அணியை வெற்றி பெறவைத்த – ஜடேஜா

Jadeja
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

Faf-1

- Advertisement -

அதன் பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணியானது டுபிளிசிஸ் மற்றும் கெய்க்வாட் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக நல்ல துவக்கத்தை பெற்றது. டூபிளெஸ்ஸிஸ் 43 ரன்களும், கெய்க்வாட் 40 ரன்களும் குவித்தனர். அதன்பிறகு ராய்டு, ரெய்னா, தோனி என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மொயின் மட்டும் 32 ரன்கள் குவித்து ஓரளவு நம்பிக்கை கொடுத்தார்.

பின்னர் கடைசி நேரத்தில் இரண்டு ஓவருக்கு 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஜடேஜா அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே 19வது ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்து அசத்திய ஜடேஜா அந்த நான்கே பந்துகளில் சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார் என்றே கூறலாம்.

ஏனெனில் முக்கியமான அந்த 19ஆவது ஓவரில் அவரது அதிரடி காரணமாக 22 ரன்கள் வந்ததால் கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. பிறகு கடைசி ஓவரிலும் சுனில் நரேன் சிறப்பாக பந்து வீச சாம் கரன் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழந்த நிலையில் கடைசி பந்தில் தீபக் சாகர் ஒரு ரன் அடித்ததன் மூலம் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement