அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த முன்னணி ஆல் ரவுண்டர் ஜடேஜா அந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரின் போது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் காயம் குணமடைய காரணத்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
அவருக்கு பதிலாக அணியில் இணைந்த அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி வருவதால் அவர் அணியில் நீடித்து வருகிறார். இந்நிலையில் இந்த காயத்தில் இருந்து மீண்டு எப்பொழுது களத்திற்கு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு பேட்டும் பந்தும் எடுப்பதில் மகிழ்ச்சி என்ற கேப்ஷனுடன் ஜடேஜா அவர் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஜடேஜா இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தும் ஜடேஜா இல்லாதது அணிக்கு ஒரு இழப்புதான் என்றாலும் அதனை இளம் வீரர்கள் சரியாக பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.
Feeling good.holding bat n ball after two months #gettingready #focusonyourself pic.twitter.com/5sWgkhKpoG
— Ravindrasinh jadeja (@imjadeja) March 11, 2021
இந்நிலையில் தற்போது மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ள ஜடேஜா இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை என்றாலும் அடுத்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் தொடறில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் போட்டியில் இருந்தே விளையாடுவார் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சென்னை அணிக்கு முக்கிய வீரராக விளையாடி வரும் ஜடேஜா மீண்டும் கம்பேக் கொடுத்து இந்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.