Shreyas Iyer : கடந்த இரண்டு வருடத்தில் இப்போதுதான் எங்கள் அணியின் வீரர்கள் இப்படி இருந்து பார்க்கிறேன் – ஐயர் பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

iyar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

williamson

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Pant

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஒரு தருணத்திற்காக உட்கார்ந்து காத்திருந்தேன்.இன்றுதான் எங்களது அணிவீரர்கள் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சையை பார்க்க முடிந்தது. சென்னை அணிக்கு எதிரான அடுத்த போட்டியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறன்.

Mishra 1

மேலும், மிஸ்ரா சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டு படுத்தினார். பண்ட் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரை தடுத்து நிறுத்தினால் மட்டுமே அவர்கள் ரன் குவிக்க முடியாமல் தடுக்க முடியும் இல்லையென்றால் அவர்கள் தொடர்ந்து அணிக்கு வெற்றியை பெற்று தருவார்கள். மேலும் அடுத்த போட்டியை ஆவலாக எதிர்பார்ப்பதாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

Advertisement