22 ரன்னுக்கு 2 விக்கெட்.. அப்போ சூர்யா பாய் என்கிட்ட சொன்னது இதுதான் – இஷான் கிஷன் அளித்த பேட்டி

Ishan-Kishan
- Advertisement -

விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி சேசிங் செய்த விதம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவிக்கவே இந்திய அணிக்கு 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை இந்திய அணி இவ்வளவு பெரிய சேசிங்கை செய்யவில்லை என்பதனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற கேள்வியே அனைவரது மத்தியிலும் இருந்தது.

- Advertisement -

ஆனால் இந்த சேசிங்கை மிகச் சிறப்பாக செய்து காட்டிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் இந்திய அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த வேளையில் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இஷான் கிஷன் 39 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி என 58 ரன்கள் குவிக்க சூரியகுமார் யாதவும் 42 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 80 ரன்கள் குவித்தார். ஒருவேளை அவர்கள் இருவரில் யாராவது ஒருவர் விரைவில் ஆட்டம் இழந்திருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியையே சந்தித்திருக்கும். ஆனால் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரது இந்த பார்ட்னர்ஷிப்பே வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து சூரியகுமார் யாதவுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய இஷான் கிஷன் கூறுகையில் : முதலில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன். அதிலும் முகேஷ் குமார் இறுதி கட்டத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசி சிக்கனமாக ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்த மைதானத்தில் பந்து வீசுவது அவ்வளவு எளிதானது இல்லை என்றாலும் அவர் அற்புதமாகவே செயல்பட்டார். ரிங்கு சிங் இந்த போட்டியை மிகச் சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார். தனது கரியரின் ஆரம்பத்திலேயே அவர் இப்படி விளையாடியுள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.

இதையும் படிங்க : 209 ரன்கள் டார்கெட்ன்னு தெரிஞ்சதும் நான் போட்ட ஸ்கெட்ச் இதுதான்.. கெத்தாக பேசிய – கேப்டன் சூரியகுமார் யாதவ்

22 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த போது நாங்கள் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அப்போது சூரியகுமார் யாதவ் என்னிடம் வந்து கூறியது ஒரே ஒரு விடயம் தான். பின்னால் வரும் வீரர்களுக்கு நாம் நிறைய ரன்களை மீதம் வைத்து அழுத்தத்தை கொடுக்கக் கூடாது. உன்னுடைய இயல்பான விளையாட்டை நீ விளையாட வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதோடு எப்போதெல்லாம் பெரிய ஷார்ட் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவரே அதனை விளையாடினார். மேலும் எங்களது பார்ட்னர்ஷிப்பில் விரைவாக ரன்களை சேர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஒருவேளை நான் ஆட்டம் இழந்தாலும் விரைவாக நிறைய ரன்களை குவித்துவிட்டு ஆட்டம் இழக்க வேண்டும் என்று நினைத்தேன். இளம் வீரர்களைக் கொண்ட எங்கள் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இவ்வளவு பெரிய அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement