இந்திய அணியின் அடுத்த சூப்பர் வீரராக இவர் மாற எல்லா வாய்ப்பும் உள்ளது – இர்பான் பதான் நம்பிக்கை

pathan 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் அனைத்து அணிகளும் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் முதல் பாதியில் 7 போட்டிகளில் விளையாடி இருந்த கொல்கத்தா அணி வெறும் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்று இருந்தது.

kkr

- Advertisement -

ஆனால் தற்போது இப்போது துவங்கியுள்ள இந்த தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி தற்போது அனைவரையும் அசர வைத்துள்ளது. இந்த இரண்டு வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் தொடக்க வீரரான வெங்கடேச ஐயர் காரணமாக திகழ்கிறார்.

ஏனெனில் முதல் போட்டியின்போது பெங்களூரு அணி அடித்த 92 ரன்கள் 10 ஓவர்களில் சேஸ் செய்த கொல்கத்தா அணி அடுத்ததாக மும்பை அணி நிர்ணயித்த 156 என்கிற இலக்கினை 15 ஓவர்களில் எட்டி அசத்தியது. இந்த இரண்டு போட்டியிலும் கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

venkatesh iyer

இந்நிலையில் அவரது இந்த அசத்தலான ஆட்டம் கிரிக்கெட் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இர்பான் பதானை வெகுவாக கவர்ந்துள்ளது. இது குறித்து பேசுகையில் அவர் கூறியதாவது : வெங்கடேஷ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் ஒவ்வொரு ஷாட்டும் தனித்துவமாக உள்ளது. மும்பை அணிக்கு எதிராக அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது.

Venkatesh-iyer-3

குறிப்பாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் போல்ட் ஆகியோரது பந்துவீச்சை கூட வெங்கடேஷ் ஐயர் எந்தவித பயமுமின்றி அசால்டாக எதிர்கொண்டு விளையாடினார். எதிர்காலத்தில் இந்திய அணியின் சிறப்பான வீரராக வெங்கடேஷ் ஐயர் உருவாக அருமையான வாய்ப்பு உள்ளது என பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement