விராட் கோலி செய்த இந்த ஒரு தப்பு தான். இந்திய அணி இப்படி மோசமாக தோற்க காரணம் – இர்பான் பதான் விளாசல்

pathan 1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை கண்டு ஏமாற்றத்தை அளித்தது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது லீக் போட்டியிலாவது வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் மட்டுமே அடிக்க அதனை நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 15 ஓவர்களில் சேஸிங் செய்து அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது அரையிறுதி வாய்ப்பை நழுவ விடும் நிலைக்கு சென்றுள்ளது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் தற்போதைய ரன்ரேட் மிகவும் சரிந்துள்ளதால் அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறுவதில் பெரிய சிக்கல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணி தோல்வி குறித்து ஒரு முக்கிய கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இட்ட பதிவில் குறிப்பிட்டதாவது : இது போன்ற பெரிய தொடரில் பிளேயிங் லெவனை ஒரே போட்டியின் முடிவை வைத்து மாற்றுவது மிகப் பெரிய தவறு என்றும் அதனால் அணியின் முடிவு மோசமாகத்தான் அமையும் என்பது இந்த போட்டியில் தெரிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவங்க 2 பேருக்கும் இடையே உள்ள பிரச்சனை உண்மைதானோ ? அம்பலமான பிளவு – ரசிகர்கள் அதிருப்தி

அதுமட்டுமின்றி வீரர்களுக்கு அவர்கள் இடத்தை நிரந்தரமாக அளித்தால்தான் சிறப்பாக விளையாட முடியும் என்றும் இந்த போட்டியில் விராத் கோலி பெரிய வீரர்களுக்கு இடையே ஏற்படுத்திய இந்த இடமாற்றம் தோல்விக்கு காரணமாக அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement