ரசிகர்களை விடுங்க.. அவங்களே பாண்டியாவை கேப்டனா ஏத்துக்கல.. மும்பையை ஃபினிஷ் பண்ணிட்டாரு.. இர்பான் பதான் விமர்சனம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது. குறிப்பாக மே மூன்றாம் தேதி நடைபெற்ற 51வது லீக் போட்டியில் கொல்கத்தாவிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்றது. மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70, மனிஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக துசாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த மும்பை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 18.5 ஓவரில் 145 ரன்களுக்கு அவுட்டானது. ரோகித் சர்மா, கேப்டன் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மும்பையை முடித்த பாண்டியா:
கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 12 வருடங்கள் கழித்து மும்பையை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா தோற்கடித்தது. மறுபுறம் 11 போட்டிகளில் 8வது தோல்வியை பதிவு செய்த மும்பை பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை 99% இழந்துள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மாவை கழற்றி விட்டு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பாண்டியா தலைமையில் மும்பை முதல் வருடத்திலேயே மண்ணை கவ்வியுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களை தாண்டி முதலில் மும்பை வீரர்களே ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று இர்பான் பதான் விமர்சித்துள்ளார். மேலும் ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி கேப்டனாக சொதப்பிய ஹர்திக் பாண்டியா மும்பையின் தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் 2024 தொடரில் மும்பை அணியின் கதை முடிந்துள்ளது. பேப்பரில் அவர்கள் நல்ல அணியாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் சிறப்பாக வழி நடத்தப்படவில்லை. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் பற்றிய கேள்வி செல்லுபடியாகும். இன்று கொல்கத்தா 57/5 என தடுமாறிய போது நீங்கள் நமன் திர் வைத்து 3 ஓவர்கள் வீசினீர்கள். 6வது பவுலரை பயன்படுத்திய நீங்கள் மனிஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயரை வைத்து கொல்கத்தா முக்கிய பார்ட்னர்ஷிப் உருவாக விட்டீர்கள்”

இதையும் படிங்க: தோனி எனக்கு இன்னொரு அப்பா மாதிரி.. அவர் சொல்ற சின்ன விஷயம் என்னை பெரிசாக்குது.. பதிரனா

“150 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய கொல்கத்தா அந்த 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் காரணமாக 170 ரன்கள் எடுத்தது. இதுதான் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் மற்றும் அணி நிர்வாகம் முக்கியமாகும். தற்சமயத்தில் மும்பை ஒரு அணியாக இணைந்து விளையாடவில்லை. அதுவே இந்த வருடம் அவர்கள் கற்க வேண்டிய பாடமாக அமைந்தது. அனைத்து வீரர்களும் உங்களுடைய கேப்டனை ஏற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த வருடம் மும்பை அணியில் நடந்ததாக எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement