இந்த காரணம் போதாதா.. இந்தியாவுக்காக அடுத்த 10 – 15 வருசத்துக்கு சாய் சுதர்சன் ஆடுவாரு.. இர்பான் பதான் உறுதி

Irfan Pathan
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அர்ஷிதீப் 5, ஆவேஷ் கான் 4 விக்கெட்களை எடுத்த வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 117 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் தமிழக வீரர் சாய் சுதர்சன் 55* ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக அப்போட்டியில் அறிமுகமாக விளையாடிய சாய் சுதர்சன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் போட்டியிலேயே அரை சதமடித்த 4வது இந்திய துவக்க வீரர் என்ற சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.

- Advertisement -

15 வருஷம் விளையாடுவாரு:
டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு அறிமுகமான அவர் 2023 ஃபைனலில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதைத்தொடர்ந்து இந்தியா ஏ அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றி பெற வைத்த அவர் கவுண்டி முதல் ரஞ்சி வரை அனைத்து விதமான உள்ளூர் தொடர்களிலும் கிடைத்த வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அதனால் இத்தொடரில் தேர்வான அவர் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் 400வது வீரர் என்ற தனித்துவமான பெயரையும் பெற்றார். இந்நிலையில் வேகத்துக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருக்கக்கூடிய தென்னாப்பிரிக்க மண்ணில் அசத்திய சாய் சுதர்சன் அடுத்த 10 – 15 வருடங்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை காண்பித்ததாக முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தென்னாப்பிரிக்காவில் உள்ள பிட்ச்சில் இது போல பேட்டிங் செய்தால் நீங்கள் இந்தியாவுக்காக அடுத்த 10 – 15 வருடங்களுக்கு விளையாடக் கூடிய ஒருவரை கண்டறித்து விட்டீர்கள் என்பது அர்த்தம். ஆரம்பத்திலேயே இப்படி சொல்கிறேன் என்றாலும் அவர் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளார். குறிப்பாக தன்னுடைய முதல் பந்திலேயே அவர் பவுண்டரி அடித்து கேரியரை அபாரமாக துவங்கியுள்ளார்”

இதையும் படிங்க: தோனி கரெக்ட்டா யூஸ் பண்ணுவாரு.. கமின்ஸ்க்கு நிகரான அவரை சிஎஸ்கே வாங்கனும்.. ரெய்னா கோரிக்கை

“அவர் தன்னுடைய கால்களை பயன்படுத்தி வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 வகையான பந்துகளையும் முன்னோக்கி பின்னோக்கி சென்று நன்றாக அடிக்கிறார். ஸ்வீப் ஷாட் மட்டுமல்லாமல் குறைந்த வேகத்துடன் வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை இறங்கி சென்று விளாசுகிறார். அதே போல முன்னோக்கி சென்று ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ளும் அவரிடம் நல்ல முதிர்ச்சி தென்படுகிறது” என்று கூறினார்.

Advertisement