இவ்ளோ தான் டைம் அதுக்குள்ள கண்ட்ரோல் ஆகலேனா இந்த வருஷம் ஐ.பி.எல் நடக்காது – பி.சி.சி.ஐ அதிரடி

IPL
- Advertisement -

இந்தியாவில் பதின்மூன்றாவது சீசனாக ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ம் தேதி முதல் துவங்கும் என்று ஏற்கனவே போட்டி அட்டவணைகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு போட்டிகள் தடைபட்டு உள்ளன.

Ipl cup

- Advertisement -

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. உலகையே அச்சுறுத்தும் இந்த கொடூர நோய்க்கு இதுவரை 4,000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இதுவரை 75 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்தியாவின் இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதை ரத்து செய்யவும் மேலும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், பணிக்கு செல்பவர்கள், விளையாட்டுத்துறை என அனைத்து தரப்பினருக்கும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

CskvsMi

மேலும் இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சிக்கல் ஏற்பட்டது அதுமட்டுமின்றி தற்போது அனைத்து வகை விளையாட்டுப்போட்டிகளில் ரசிகர்கள் இன்றி நடத்தலாம் என்ற யோசனையும் ஒப்புதல் வாங்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 29ம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்தது.

- Advertisement -

இதற்கு முடிவு தெரிவிக்கும் விதமாக தற்போது பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஐபிஎல் டி20 போட்டிகள் வரும் 29ம் தேதி துவங்க படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நோயின் தீவிரம் காரணமாக போட்டி ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. ஏனெனில் இந்த வைரஸ் பரவுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து வெளியான தகவலின் படி ஏப்ரல் 20 தேதிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே இந்த வருட ஐ.பி.எல் நடத்தப்படும். இல்லையெனில் இந்த வருடம் ரத்து செய்யப்படும் என்ற தகவல் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ரத்து செய்யப்படும் நிலை ஏற்படுமாயின் அது ஏப்ரல் 10 ஆம் தேதியே அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி இந்த வருட ஐ.பி.எல் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் உறுதிசெய்யப்படவில்லை என்றால் அடுத்த வருடம் தான் ஐ.பி.எல் என்பதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement