மைதானத்தில் ஸ்ரேயாஸ் செய்த சேட்டை..! வாய் மூடி சிரித்த தல தோனி.! வீடியோ உள்ளே

shreyas
- Advertisement -

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு வேடிக்கையான நிகழ்வுகளும் , வாயை பிளக்க வைக்கும் பல சம்பவங்கள் நடந்தேறி கொண்டு தான் இருக்கிறது. நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லிக்கு எதிரான ஒப்புக்கு சப்பாணி போட்டியில் டெல்லி அணியை சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் ஒரு வேடிக்கையான செயல் ஒன்றை செய்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் 52 வது லீக் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்டலா மைதானத்தில் நேற்று (மே 18 ) நடைபெற்றது. இந்த போட்டியில் பிலே ஆப் சுற்றிற்கு தகுதி ஏற்கனவே பெற்ற சென்னை அணியும் , இந்த தொடரில் இருந்து வெளியேறிய டெல்லி அணியும் மோதியது.இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் டாஸ் போடும் போது ஷ்ரேயாஸ் ஐயர் தன்னிடம் இருந்த நாணயத்தை மேல்நோக்கி வீசுவதற்கு பதிலாக, தனது முன்னே இருந்த கேமராக்கு முன்னர் வீசினார். அது நேராக கேமராமேனின் காலடியில் போய் விழுந்தது.

- Advertisement -

இதனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த தோனி மற்றும் உடன் இருந்தவர்கள் அனைவரும் அந்த நாணயத்தில் இருப்பது பூவா தலையை என்று சென்று பார்த்தனர். ஆனால் தோனி நாணயம் தோனிக்கு சாதகமாகவே அமைந்தது. இதன் பின்னர் டாஸ் வென்ற தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Advertisement