ஐ.பி.எல் தொடரில் படுமோசமான சாதனையில் இணைந்த ஹர்ஷல் பட்டேல் – விவரம் இதோ

Harshal
- Advertisement -

நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் 19வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதின. இப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. பிறகு இரண்டாவது இன்னிங்சை ஆடிய பெங்களூர் அணியால் 20 ஓவர் முடிவில் 122 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

Jadeja

- Advertisement -

இந்த போட்டியில் பெங்களூர் அணிக்காக பந்துவீசிய ஹர்ஷல் பட்டேல் மிக மோசமான சாதனை ஒன்றுடன் இணைந்திருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலிருந்தே பெங்களூர் அணிக்காக மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார் ஹர்ஷல் பட்டேல். நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் முதல் மூன்று ஓவர்கள் மிகச் சிறப்பாகவே பந்து வீசினார். முக்கியமாக 14-வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல், அந்த ஓவரில் சுரேஷ் ரெய்னா மற்றும் டுயூப்ளசிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்து பெங்களூர் அணிக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தார்.

இதனால் சென்னை அணியின் ரன் குவிக்கும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் 18-வது ஓவரில் அம்பத்தி ராயுடு வையும் அவுட்டாக்கி கெத்து காட்டினார். ஹர்ஷல் பட்டேல் வீசிய முதல் மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால் இருபதாதவது ஓவரை வீச வந்த அவரை வெளுத்து வாங்கினார் ரவீந்திர ஜடேஜா. அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் சிக்‌ஸ் கொடுத்த ஹர்ஷல் பட்டேல், மூன்றாவது பந்தை ஹைபுல்டாஸ் நோபாலாக வீசினார். அந்த பந்தும் சிக்ஸருக்கு பறந்தது. பிறகு அதற்காக வழங்கப்பட்ட ஃப்ரீ ஹிட் பந்தும் சிக்ஸருக்கு சென்றது.

harshal 1

அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்த பட்டேல் மீண்டும் ஐந்தாவது பந்தில் சிக்ஸ் கொடுத்தார். ஆறாவது பந்து பவுண்டரிக்கு சென்றது. இந்த ஓவரில் மட்டும் ஐந்து சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் மொத்தம் 37 ரன்களை வாரி வழங்கியிருந்தார் ஹர்ஷல் பட்டேல். இதற்கு முன்னதாக 2011ம் ஆண்டு கொச்சி அணிக்காக விளையாடிய பிரசாந்த் பரமேஸ்வரன் ஒரே ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகமாக இருந்தது.

harshal 2

நேற்றைய போட்டியில் ஒரே ஓவரில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்ததன் மூலமாக ஐபிஎல் தொடர்களில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மிக மோசமான சாதனையுடன் இணைந்திருக்கிறார் ஹர்ஷல் பட்டேல். பிரசாந்த் பரமேஸ்வரன் அந்த ஓவரை கிறிஸ் கெயில்க்கு எதிராக வீசினார். அப்போது கிறஸ் கெயில் பெங்களூருக்கு அணிக்காக விளையாடினார். தற்போது பெங்களூர் அணி பவுலரும் அதே அளவிலான ரன்னை எதிரணி வீரருக்கு வாரி வழங்கி இருக்கிறார்.

Advertisement