ஐபிஎல் பரிசுத்தொகை..! சென்னை வீரர்களுக்கு எவ்வளவு பங்கு தெரியுமா..? – பார்த்த அசந்துவிடுவிங்க..!

ipl-price
- Advertisement -

கடந்த ஞாற்றுக்கிழமை (மே 27) ஐ..பி.எல் சீசன் 11-ன் இறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றிய சென்னை அணிக்கு கோடி கணக்கில் தொகையும் வழங்கப்பட்டது.
watson

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. பரபரப்பான இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி வாட்சனின் அதிரடி சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

- Advertisement -

இந்த போட்டி முடிந்த பின் பல்வேறு அணிகளுக்கும், தனிப்பட்ட வீரர்களுக்கும் கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது. அதில் முதல் பரிசை வென்ற சென்னை அணிக்கு வெற்றி பட்டதுடன் 20 கோடி ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. இதில் 10 கோடி அணி நிர்வாகத்திற்கும் மீதமுள்ள 10 கோடி அந்த அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் சமமாக பங்குபிரித்து தரப்படும்.
chennai

மேலும், இந்த தொடரில் இரண்டாவது இடத்தை பிடித்த ஹைதராபாத் அணிக்கு ரன்னர் அப் கோப்பையுடன் 12.5 கோடி பரிசாக வழங்கபட்டது. அத்துடன் இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீர்ர், அதிக விக்கெட் குவித்த வீரர், சிறந்த அதிரடி வீரர், சிறந்த கேட்ச் பிடித்த வீரர், ஸ்டைலிஷ் வீரர், சிறந்த சிந்தனை உள்ள வீரர் என்று பல்வேறு தரப்பில் முதல் இடத்தில் இருந்த வீரர்களுக்கு கோப்பையுடன் தலா 10 லட்ச ருபாய் பணமும் பரிசாக வழங்கப்பட்டது

Advertisement