உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக இந்திய அணி வரும் 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் புதிய சீருடையில் இந்திய அணி வீரர்கள் நேற்று ஒரு போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டனர். இந்த போட்டோ ஷூட்டில் அனைத்து இந்திய அணி வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்த போட்டோ ஷூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :
Special occasion, special kit ???? #TeamIndia will wear this in their #OneDay4Children game against England on Sunday. #OD4C | #ENGvIND | #CWC19 pic.twitter.com/ZvuX4be37F
— ICC (@ICC) June 29, 2019
இந்த புதிய சீருடையில் தான் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளைய போட்டியில் விளையாடும் என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சீருடையினை ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.