இறுதிப்போட்டி நடக்கும் வரை இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் தான் இருக்கனுமாம் – காரணம் இதுதான்

Kohli
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் போன்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

worldcup

- Advertisement -

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது. அடுத்து நேற்று நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் தற்போது நாடு திரும்புவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது யாதெனில் மான்செஸ்டரில் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை இந்திரர்கள் காலி செய்துவிட்டனர். ஆனாலும் அவர்கள் நாடு திரும்புவதற்கான விமான டிக்கெட் இன்னும் எடுத்து கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்திய வீரர்களுக்கான டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kohli

மேலும், இந்திய அணி வீரர்கள் ஒரு சிலர் விரைவில் டிக்கெட் ஏற்பாடு செய்து தரப்பட்டு இந்தியா திரும்புவார்கள் என்றும் மீதி சிலர் இறுதிப்போட்டி வரை இங்கேயே தங்கியிருந்து அந்த போட்டி முடிந்த பின்பு தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய அணி வீரர்களுக்கு டிக்கெட் போடுவதில் இவ்வளவு தாமதமாக என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை இந்தி ரசிகர்கள் கலாய்த்து ஒருவரும் குறிப்பிடத்தக்கது.

Advertisement