ஷேன் வார்ன் மறைவிற்காக இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் செய்த செயல் – நெகிழ்வைத்த தருணம்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று மார்ச் 4-ஆம் தேதி மொகாலி மைதானத்தில் துவங்கியது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்து இருந்தது.

பின்னர் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். விஹாரி, ரிஷப் பண்ட் மற்றும் அஷ்வின் ஆகியோர் அரைசதம் கடந்திருந்தனர்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இலங்கை அணி தற்போது அவர்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டாம் நாள் ஆட்ட நேரத்திற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் மற்றும் இலங்கை அணி வீரர்கள் இணைந்து ஷேன் வார்ன்க்காக செய்த ஒரு செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி 52 வயதான ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரரான ஷேன் வார்ன் நேற்று மாரடைப்பு காரணமாக தாய்லாந்தில் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியானதிலிருந்து உகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த இரண்டாம் நாள் ஆட்ட நேரத்திற்கு முன்பாக ஷேன் வார்ன்னின் புகைப்படம் மைதானத்தில் ஒளிரவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரு அணி வீரர்களும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் அது மட்டுமின்றி இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்த இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐயானது நேற்று மறைந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் ஷேன் வார்ன் மற்றும் ராட் மார்ஷ் ஆகியோரது மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக இன்று இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர் என்று இந்திய அணி வீரர்கள் மௌன அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளது.

இதையும் படிங்க : உலககோப்பை 2022 : பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்குமா இந்தியா – முழு விவரம்

அந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தற்போது பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய வீரர்களும் அவரது மறைவிற்கு துக்கத்தை அனுசரித்து கையில் கருப்பு பட்டை அணிந்து போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement