கோபப்பட்ட கோலி. ஸ்டம்பை அடித்து நொறுக்கிய அகர்வால் – பயிற்சியில் பிரச்சனை

Kohli-1
- Advertisement -

இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெற்று அடுத்ததாக அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட தற்போது இந்தூரில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

Kohli

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டி நாளை இந்தூரில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதால் பிங்க் நிற பந்துகளை கொண்டு இந்திய வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியில் புதிதாக பின்க் நிற பந்துகளை வைத்து வீரர்கள் பயிற்சி செய்து வருவதால் அனைவரும் சற்று தடுமாற செய்தனர்.

குறிப்பாக சிவப்பு நிற பந்துகளை அடித்து நொறுக்கும் கோலி பிங்க் நிற பந்துகளை எதிர்கொண்டு சற்று தடுமாறினார். மேலும் உடம்பின் மீது அடியும் வாங்கினார். மேலும் பந்துகளை விட்டால் கோபமாகி தன்னைத்தானே திட்டிக் கொண்டும் இருந்ததை பார்க்க முடிந்தது. அதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வாலும் தடுமாறினார்.

Agarwal

மேலும் பந்துகளை சரியாக கணிக்க முடியாத விரக்தியில் பயிற்சியின்போது ஸ்டம்பை அடித்து நொறுக்கினார். எனவே இன்றைய வலைப் பயிற்சியில் இந்திய அணி வீரர்களுக்கு பிங்க் நிற பந்துகளை ஆடுவது கொஞ்சம் கடினம் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement