அப்படி என்ன அவசரம் உங்களுக்கு ? ரோஹித்தின் சர்ச்சையான முடிவால் – அதிருப்தியில் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மார்ச் 4-ஆம் தேதி மொகாலி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஜடேஜா 45 ரன்களுடனும், அஷ்வின் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

Jadeja

- Advertisement -

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியானது சிறப்பாக ரன்களை குவித்தது. அதிலும் குறிப்பாக ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 10 ரன்களில் தனது ஆட்டத்தை தொடர்ந்த அஷ்வின் அரைசதம் கடந்து 61 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் நேற்றைய போட்டியின் முடிவில் 45 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா தனது அதிரடியான அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியில் சதம் கடந்தார். சதம் கடந்தது மட்டுமின்றி 175 ரன்கள் அடித்து இந்திய அணி டிக்ளர் செய்யும் வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்களை எடுத்திருந்த போது திடீரென கேப்டன் ரோகித் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதன் காரணமாக ஜடேஜா சற்று அதிர்ச்சி அடைந்தார் என்றே கூறலாம்.

jadeja 2

ஏனெனில் ஜடேஜா 175 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி 2-வது நாளின் இரண்டாவது செசனில் மட்டுமே விளையாடி வந்தது. இதனால் ஜடேஜா எளிதாக 200 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் ரோஹித் அதனை வழங்க மறுத்தது ஜடேஜாவுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை கண்ட ரசிகர்களும் சற்று அதிருப்தி அடைந்தனர். ஏனெனில் அவசரமாக டிக்ளேர் செய்யவேண்டிய கட்டாய நிலை ஒன்றும் இந்திய அணிக்கு அப்போது இல்லை ஆனாலும் ரோஹித் அவசரப்பட்டு டிக்ளேர் முடிவை அறிவித்தார்.

- Advertisement -

இன்னும் 4-5 ஓவர்கள் வரை ஜடேஜாவை விளையாட அனுமதித்து இருந்தால் கூட அவரால் அதிரடியாக ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்திருக்க முடியும். ஆனால் இப்படி இரட்டை சதம் அடிக்க இருந்த அருமையான வாய்ப்பை கிட்டத்தட்ட அவரிடம் இருந்து ரோஹித் சர்மா பறித்து விட்டார் என்றே கூறலாம். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவின் அதிகபட்ச ஸ்கோராக இந்த 175 ரன்கள் நாட்அவுட் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : 20 நிமிட போராட்டம். ஷேன் வார்ன் மறைவிற்கு பின்னால் உள்ள மர்மம் – தாய்லாந்து அரசாங்கம் கொடுத்த விளக்கம்

இந்நிலையில் ரோஹித் எடுத்த இந்த டிக்ளேர் முடிவு காரணமாக ரசிகர்கள் பலரும் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஏனெனில் 2-ஆம் நாள் ஆட்டத்தில் 2-வது செசன் முடிப்பதற்குள் ஏன் டிக்ளேர் செய்ய வேண்டும். ஜடேஜா 200 அடிக்கும் வரை பொறுத்து இருக்கலாம். அது மட்டுமின்றி இந்திய அணி நல்ல முன்னிலை பெற்று உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி விரைவாக இலங்கை அணியை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு கூட உள்ளது.

போட்டியை இவ்வளவு விரைவாக முடிக்க அப்படி என்ன உங்களுக்கு அவசரம்? நிச்சயம் ஜடேஜா 200 ரன்களை அடிக்கும் வரையோ அல்லது அவர் ஆட்டம் இழக்கும்வரை வரையோ ரோகித் சர்மா காத்திருந்திருக்க வேண்டும். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா அவசரப் பட்டு விட்டார் என்று ரசிகர்கள் தங்களது அதிருப்தியை கேள்விகளாக சமூக வலைதளம் மூலம் ரோஹித்துக்கு முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement