மெல்போர்ன் மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரோஹித்தின் குட்டி ரசிகர். 6.5 லட்சம் அபராதம் – எதற்கு தெரியுமா?

Rohit-and-Fan
- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குருப் இரண்டில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய அணியானது கே.எல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 186 ரன்கள் குவித்தது.

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே குவித்ததால் 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் மெல்போர்ன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம் தற்போது இணையத்தில் வீடியோவாகவும், செய்திகளாகவும் ரசிகர்கள் மத்தியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்று இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் சென்றபோது போட்டி சிறிது நேரம் போட்டி தடைப்பட்டது. தொலைக்காட்சிகளிலும் இதுகுறித்த எந்த ஒரு விவரமும் ஒளிபரப்பப்படவில்லை.

ஆனால் அந்த நேரத்தின் போது ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அந்த வகையில் மிகவும் இளம் வயதே ஆன ரசிகர் ஒருவர் மெல்போர்ன் கிரிக்கெட் மைதான அதிகாரிகளை மீறி ரோகித் சர்மாவை பார்க்க கையில் இந்திய கொடியுடன் அவரை நோக்கி ஓடி வந்தார். அவரை பின்தொடர்ந்த செக்யூரிட்டி அதிகாரிகள் அவரை பிடித்து மைதானத்தில் இருந்து வெளியே இழுத்துச் செல்ல முற்பட்டனர்.

- Advertisement -

அப்போது பாதுகாப்பு அதிகாரிகளிடம் ரோஹித் சர்மா அந்த ரசிகரை அடிக்க வேண்டாம், திட்டவும் வேண்டாம் அவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். முஹமது ஷமியும் பாதுகாப்பு அதிகாரியிடம் அவரை பாதுகாப்பாக கொண்டு செல்லுங்கள் வேறு ஏதும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அப்படி அவர்கள் கூட்டிக்கொண்டு போகும்போதே ரசிகரை நோக்கி ரோஹித் சர்மா சில வார்த்தைகளையும் பேசினார்.

இதையும் படிங்க : இதோடு விட்றாதீங்க. அரையிறுதியிலும் எங்களை சப்போர்ட் செய்யுங்க – வெற்றிக்கு பிறகு ரோஹித் வேண்டுகோள்

இந்நிலையில் அந்த சிறு வயது ரசிகருக்கு இந்திய மதிப்பில் 6.5 லட்சம் அபராதம் விதித்து மெல்போன் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு என அனைத்துமே முக்கியம். அதனால் மைதானங்களில் அத்துமீறி நுழைப்பவர்கள், விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்ட வேளையில் அந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறியதற்காக அந்த ரசிகருக்கு ரூபாய் 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement