இவருக்கு இன்னும் எவ்ளோ சேன்ஸ் தான் குடுப்பீங்க. ரிஷப் பண்டின் சொதப்பலால் – கடுப்பான ரசிகர்கள்

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது கிரிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியும் மழை காரணமாக முழுவதுமாக நடைபெறாத வேளையில் போட்டி இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியை வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Washington Sundar.jpeg

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்டின் மீது ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் மிகச் சிறப்பாக விளையாடும் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சொதப்பி வருகிறார்.

இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட அவரது ஆட்டம் படுமோசமாகவே இருந்தது. அதே வேளையில் மற்றொருபுறம் வாய்ப்புக்காக சஞ்சு சாம்சம் தொடர்ச்சியாக காத்திருக்கும் வேளையில் ரிஷப் பண்ட் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் வீணடித்து வருகிறார் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

Rishabh Pant

ரசிகர்கள் குறிப்பிடுவது போலவே நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் கூட 16 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 10 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார். இப்படி தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி வரும் அவருக்கு பதிலாக திறமையுடன் தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் சாம்சனுக்கு அந்த வாய்ப்பினை வழங்கலாம் என்று ரசிகர்கள் மட்டும் இன்றி பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள், நிபுணர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அம்பத்தி ராயுடு மாதிரி இவரோட கரியரையும் முடிக்க பாக்குறாங்க – பி.சி.சி.ஐயை விளாசிய டேனிஷ் கனேரியா

ஆனால் ஒருபுறம் பிசிசிஐ ரிஷப் பண்ட்டை எதிர்கால கேப்டனாக பார்ப்பதால் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கி வருகிறது. அதேபோன்று இந்திய அணியின் நிர்வாகமும் ரிஷப் பண்ட்டை தொடர்ச்சியாக ஆதரித்து வருவதால் அவர்கள் மீதும் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement