ஏசியன் கேம்ஸ் 2023 : 5 டக் அவுட்.. நாக் அவுட்டில் 51 ரன்னுக்கு வங்கதேசத்தை சுருட்டி பழி தீர்த்த இந்திய அணிக்கு வெள்ளி உறுதி.. ஃபைனலில் மோதுவது யார்?

- Advertisement -

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடர் சீனாவில் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் 2014க்குப்பின் முதல் முறையாக டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் தற்போது முதலாவதாக இந்திய மகளிர் அணியினர் விளையாடி வருகின்றனர். குறிப்பாக ஐசிசி தரவரிசையில் டாப் இடத்தில் இருப்பதால் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது.

அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது மழை வந்த காரணத்தால் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவித்ததை தொடர்ந்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதைக் தொடர்ந்து செப்டம்பர் 24ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா அண்டை நாடான வங்கதேசத்தை எதிர்கொண்டது.

- Advertisement -

அபார வெற்றி:
அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த முதல் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 17.5 ஓவரில் வெறும் 51 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக சஹாதி ராணி 0, சுல்தானா 0, சோர்ணா அக்தர் 0, பாஹிமா காட்டுன் 0, மறுபா அக்தர் 0 என ஐந்து வீராங்கனைகள் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் ஆரம்பம் முதலே தடுமாறி அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 12 (17) ரன்கள் எடுக்க பந்துவீச்சில் தெறிக்க விட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக பூஜா வஸ்திரகர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 52 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் மந்தனா 7 (12) சபாலி வர்மா 17 (21) ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20* (15) ரன்கள் அடித்து 8.2 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் 70 பந்துகள் மீதம் வைத்து எளிதான வெற்றியை பெற்று கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் மறுபா அக்தர், பாஹிமா காட்டுன் தலா 1 விக்கெட் எடுத்தும் தோல்வியை சந்தித்த வங்கதேசம் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட தகுதி பெற்றது. அதன் வாயிலாக கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கதேச மண்ணில் 1 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வெல்ல விடாததற்கு பழி தீர்க்கும் வகையில் இந்தியா இந்த வெற்றியை பதிவு செய்தது என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: ஐசிசி ரேங்கிங்ஸில் நம்பர் ஒன் வந்து என்ன பயன்.. முடிஞ்சா அங்க ஆஸியை ஜெயிச்சு காட்டுங்க – இந்திய அணிக்கு கம்பீர் மறைமுக சவால்

மேலும் இதன் காரணமாக செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் தங்கப்பதக்கத்தை பெறுவதற்கான வாய்ப்பை பெறுவதற்கு இந்தியா தகுதி பெற்றது. ஒருவேளை அதில் தோற்றாலும் வெள்ளி பதக்கமும் இப்போதே உறுதியானது. அத்துடன் இன்று 11.30 மணிக்கு நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதில் வெல்லும் அணியை ஃபைனலில் எதிர்கொண்டு தங்கப் பதக்கத்தை இந்தியாவில்வதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement