நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி மூன்று வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 7 புள்ளிகளில் உள்ளது.
அதன்படி இன்று 22ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற உடையணிந்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியின் அதனுடைய நீலநிற உடை அணிந்து விளையாடி வருகிறது.
மேலும் இந்த மாதம் 30-ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இந்திய அணி அதிகாரப்பூர்வமாக ஆரஞ்சு நிற உடையணிந்து விளையாடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது அந்த சீருடை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த சீருடை புகைப்படங்கள் :
Is this India’s new away Jersey? @BCCI @ICC pic.twitter.com/KwNIfPhNT4
— Tejas Bhatia (@tejasbhatiaa) June 21, 2019
கால்பந்து போட்டிகளில் மட்டுமே உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டிகள் போன்றவைகளை வைத்து வேறு வேறு உடை அணிந்து விளையாடுவார்கள். அதனை அடுத்து தற்போது கிரிக்கெட்டிலும் வெவ்வேறு இரண்டு கலர்களை பயன்படுத்த ஐசிசி உலக கோப்பை தொடரில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.