அவர் மட்டும் இல்லனா இந்திய அணி ஆட்டம் கண்டுரும்.. நட்சத்திர வீரரை பாராட்டிய மகாயா நிடினி

Makhaya Ntini
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்கியது. 1992 முதல் இதுவரை தென்னாபிரிக்க மண்ணில் விளையாடிய அனைத்து டெஸ்ட் தொடரிலும் வெற்றி காண முடியாத இந்தியா இம்முறையாவது அந்த மோசமான வரலாற்றை மாற்றி புதிய சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அந்த நிலையில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறிய நிலையில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் அரை சதம் கடந்து 70* ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார்.

- Advertisement -

முக்கிய வீரர்:
இந்நிலையில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வீரர் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். குறிப்பாக வித்தியாசமான பவுலிங் ஆக்சனை பயன்படுத்தி துல்லியமான யார்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திண்டாட வைக்கும் பும்ரா இந்திய அணியின் முக்கிய விரராக இருப்பதாக நிடினி பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா பந்தை எங்கே ரிலீஸ் செய்கிறார் என்பதை பாருங்கள். அவர் பந்தை தம்முடைய தலையின் டாப் பகுதியில் இருந்து ரிலீஸ் செய்கிறார். எனவே பந்தை பின்னோக்கி இழுப்பதற்கான கோணத்தை அவர் எளிதாக பெறுகிறார். அதே சமயம் பிட்ச் செய்த பின் அவரால் பந்தை நேராகவும் வீச முடியும். அவரிடம் வலுவான மணிக்கட்டுகள் இருக்கிறதா என்பது தெரியாது”

- Advertisement -

“ஆனால் அவருடைய பவுலிங் ஆக்சன் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதுவே அழகை சேர்க்கிறது. அவருடைய யார்கர்கள் எப்போதும் தப்புவதில்லை. அவரின் இது போன்ற திறமைகளை அனைவரும் பார்த்து மகிழ்கின்றனர். என்னைப் பொறுத்த வரை பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது” என்று கூறினார்.

இதையும் படிங்க: க்ளாஸ் மட்டும் போதாது.. இப்படியே போன டெஸ்ட் டீம்ல இருந்து அனுப்பிடுவாங்க.. இளம் வீரரை எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

அவர் கூறுவது போல பும்ரா காயத்தை சந்தித்து வெளியேறியது 2022 ஆசிய, டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போன்ற தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது. இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்துள்ள பும்ரா 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க தொடரிலும் எதிரணிக்கு சவாலை கொடுக்க தயாராகியுள்ளார்.

Advertisement