இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு செல்வது உறுதி

Shami
- Advertisement -

இன்றோடு உலக கோப்பையின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைகின்றன. இன்றைய கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் இந்தியா இலங்கை அணியுடனும், ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

india

- Advertisement -

இன்றைய போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வெற்றிபெற்றாலும் சரி, தோற்றாலும் சரி இந்திய அணி அரையிறுதி போட்டியில் விளையாடுவது உறுதி. ஆனால் இலங்கையை இந்திய அணி வீழ்த்தினால் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க அணியிடம் தோற்கும் பட்சத்தில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும். அவ்வாறு இந்தியா முதலிடத்தில் வந்தால் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியுடன் மோதும்.

india

இல்லையென்றால் இங்கிலாந்து அணியுடன் மோதவேண்டும். ஒருவேளை இந்திய அணியை முதலிடத்துக்கு முன்னேறி நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் அரையிறுதியில் விளையாடினால் இந்தியா எளிதாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகும்.

Advertisement