பாகிஸ்தான், இலங்கை தொடாத மைல்கல் – ஒட்டுமொத்த சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஆசிய அளவில் புதிய வரலாறு படைத்த இந்தியா

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வருங்கால நட்சத்திரங்களை முன்கூட்டியே அடையாளப்படுத்தும் அண்டர்-19 உலகக் கோப்பை கடந்த 2000 முதல் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வருடம் மகளிர் கிரிக்கெட்டிலும் அந்த தொடரை ஐசிசி அறிமுகப்படுத்துகிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று துவங்கிய அத்தொடரில் உலகம் முழுவதிலுமிருந்து 16 அணிகள் பங்கேற்றது. அதில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் 16 வயதில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்த ஷபாலி வர்மா தலைமையில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா, அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து குரூப் டி பிரிவில் முதலிடம் பிடித்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 6 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா கடைசி வாய்ப்பில் இலங்கையை சாய்த்து ரன்ரேட் உதவியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன்பின் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் காலம் காலமாக ஆடவர் கிரிக்கெட்டிலேயே மண்ணை கவ்வ வைத்து வரும் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா பைனலுக்கு தகுதி பெற்றது. அந்த நிலைமையில் ஜனவரி 29ஆம் தேதியன்று சென்வஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் தங்களைப் போலவே லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் அசத்தி வந்த இங்கிலாந்தை இந்தியா எதிர்கொண்டது.

- Advertisement -

ஆசிய அளவில் சரித்திரம்:
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகளின் அனல் பறந்த அதிரடியான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மெக்டொனால்ட்-கே 19 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ச்சனா தேவி, டைட்டஸ் சாது, பர்ஸ்வி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 69 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷபாலி வர்மா 15 (11) ரன்களிலும் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்வேதா செராவத் 5 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்து நங்கூரமாக செயல்பட்ட திரிஷா 24 (29) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானாலும் மறுபுறம் அசத்திய சௌமியா திவாரி 24* (37) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார். அதனால் 14 ஓவரில் 69/3 ரன்களை எடுத்த இந்தியா 2023 ஐசிசி மகளிர் அண்டர்-19 டி20 உலக கோப்பையை வென்று உலகின் முதல் அண்டர் 19 சாம்பியனாக வரலாறு படைத்தது.

- Advertisement -

சொல்லப்போனால் ஆடவர் கிரிக்கெட்டில் 1983லேயே உலக கோப்பையை வென்ற இந்தியா மகளிர் கிரிக்கெட்டில் மித்தாலி ராஜ் போன்ற ஜாம்பவான் வீராங்கனைகள் தலைமையில் கூட இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை வென்றதில்லை. அந்த நிலைமையில் இந்த தொடரை வென்றுள்ள இளம் அணி மகளிர் கிரிக்கெட்டில் முதல் ஐசிசி கோப்பையை வென்று ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான சீனியர் அணிக்கே முன்னுதாரணமாக மாறியுள்ளது.

அதை விட வரலாற்றில் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை நடைபெற்ற 12 50 ஓவர் உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா 7, இங்கிலாந்து 4, நியூஸிலாந்து 1 என வெளிநாட்டு அணிகள் தான் மொத்த கோப்பைகளையும் வென்றுள்ளன. அதே போல் இதுவரை நடைபெற்ற 7 டி20 உலக கோப்பைகளில் ஆஸ்திரேலியா 5, இங்கிலாந்து 1, வெஸ்ட் இண்டீஸ் 1 என வெளிநாட்டு அணிகள் தான் மொத்த கோப்பைகளையும் வென்றுள்ளன. அதாவது மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட எந்த ஆசிய ஒரு ஐசிசி கோப்பையை வென்றதில்லை.

இதையும் படிங்க: IND vs NZ : என்னடா இது? இரண்டாவது டி20 போட்டிக்கான டீமில் தேவையில்லாத மாற்றத்தை செய்த – ஹார்டிக் பாண்டியா

தற்போது முதல் முறையாக நடைபெற்ற அண்டர்-19 மகளிர் உலகக் கோப்பை வென்றுள்ள இந்திய அண்டர்-19 அணி அதை உடைத்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஐசிசி கோப்பையை வென்ற முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக காலூன்றியுள்ள இந்தியா வருங்காலங்களில் சீனியர் அளவிலும் உலகக் கோப்பைகளை வெல்வதற்கான ஆழமான விதை இந்த வெற்றியால் போடப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement