இந்தியா தென்னாபிரிக்கா மோதும் முதல் போட்டிக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு பாதிப்பு – வெளியான ரிப்போர்ட்

INDvsRSA
- Advertisement -

ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி பாக்சிங் போட்டியாக நடைபெற இருந்தது. இந்த போட்டிக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து பல தடைகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அறிவிப்பு வெளியான நேரத்தில் அங்கு ஓமைக்கிரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் காரணமாக தென்னாபிரிக்காவிற்கு செல்லும் வான்வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தன.

INDvsRSA

- Advertisement -

அதனை அந்த பிரச்சினை ஓய்ந்த பிறகு அடுத்ததாக மீண்டும் இந்த தொடருக்கான அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டது. முன்னதாக இந்த தென் ஆப்ரிக்கா தொடரில் டி20 தொடரும் நடைபெற இருந்தது. இந்நிலையில் அந்த தொடரை ரத்து செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி அடுத்தடுத்து தடைகளை சந்தித்த இந்த தொடரானது இன்னும் ஒரு வாரத்தில் துவங்குகிறது என்று ரசிகர்கள் உற்சாகமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி இரு அணி வீரர்களும் கடுமையான பயோ பபுளில் இருப்பதனால் போட்டி எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதனால் ரசிகர்கள் இன்று முதல் போட்டியானது நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

IND

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை மைதானத்தில் குறைந்தளவு ரசிகர்களை வைத்து போட்டியை நடத்தலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியான அறிக்கையின்படி ஓமைக்கிரான் வைரஸ் பரவல் தீவிரத்தின் காரணமாகவும், முன்னெச்சரிக்கை காரணமாகவும் மைதானத்தில் ரசிகர்கள் வர அந்நாட்டு நிர்வாகம் தடை செய்து உள்ளதால் தற்போது முதல் போட்டியானது ரசிகர்கள் இன்றி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் – சீனியர் வீரர் பேட்டி

அதுமட்டுமின்றி இன்னும் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறவில்லை என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement