24 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் ஏற்பட்டுள்ள அரிதான நிகழ்வு – விவரம் இதோ

Jurel
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஏகப்பட்ட சாதனை நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் ஏற்பட்டுள்ள ஒரு அரிதான நிகழ்வு குறித்த ஒரு தகவலும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியில் இருந்து விராட் கோலி கடைசி நேரத்தில் விலகினார்.

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரர்களாக இந்திய அணியில் ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் இணைக்கப்பட்டனர். அதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது காயம் காரணமாக கே.எல் ராகுலும் விளையாட முடியாமல் போனதால் ரஜத் பட்டிதாருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அதேபோன்று முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பலான செயல்பாட்டை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ் பரத் மூன்றாவது போட்டியின் போது நீக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் இரண்டாவது போட்டி முடிந்த கையோடு காயம் காரணமாக மிடில் ஆடர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த தொடரில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக மூன்றாவது போட்டியில் சர்பராஸ் கானுக்கும் அறிமுகவாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ராஞ்சி நகரில் இன்று துவங்கி நடைபெற்று வரும் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக அண்மையில் இந்திய அணியுடன் இணைந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி இந்த தொடரில் மட்டும் இந்திய அணி சார்பாக 4 புது வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2000-ஆவது ஆண்டு விளையாடிய டெஸ்ட் தொடரில் தான் 4 வீரர்கள் ஒரே தொடரில் அறிமுகமாகி இருந்தனர்.

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலுந்து மேலும் ஒரு வீரர் விலகல்.. திரும்பி வர வாய்ப்பில்லை – விவரம் இதோ

அந்த வகையில் 2000-ஆவது ஆண்டு முரளி கார்த்திக், வாசிம் ஜாபர், முகமது கைப், நிகில் சோப்ரா ஆகியோர் ஒன்றாக ஒரே தொடரில் அறிமுகமாகியிருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது 24 ஆண்டுகள் கழித்து ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல், ஆகாஷ் தீப் என இப்படி 4 வீரர்கள் இந்திய அணிக்காக ஒரே தொடரில் அறிமுகமாகியுள்ளனர்.

Advertisement