IND vs AUS : ராஜ்கோட்டில் நடைபெற இருக்கும் 3 ஆவது போட்டியில் இருந்து முக்கிய வீரர் விலகல் – வெளியான அறிவிப்பு

Axar-Patel
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி (2-0) என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை செப்டம்பர் 27-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியிருந்தது.

இந்நிலையில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் மூன்றாவது போட்டிக்கான அணிக்கு திரும்புவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ், ஹார்டிக் பாண்டியா போன்றோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

ஆனால் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 3-ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்தும் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் அக்சர் பட்டேலின் காயத்தின் வீரியம் இன்னும் முழுமையாக குறையாததால் அவர் மூன்றாவது போட்டியில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : யார் இந்தியாவை தோற்கடிக்குறாங்களோ.. அவங்க தான் 2023 உ.கோ மேல கை வைக்க முடியும் – முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அதிரடி

அதோடு அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டியிலும் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் மூன்றாவது போட்டியிலும் தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடதக்கது.

Advertisement