IND vs AUS : 3ஆவது போட்டியில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு. துவக்க வீரராக களமிறங்கப்போவது யார்? – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தற்போது இந்து தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் மூன்றாவது போட்டியில் விளையாட காத்திருக்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இந்திய அணியில் இணையவுள்ள வேளையில் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த மாற்றங்கள் இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் எழுந்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே துவக்க வீரர் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு எந்தெந்த வீரர்கள் அணியில் இணைவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சுப்மன் கில் 3 ஆவது போட்டியில் விளையாடமாட்டார் என்பதனால் அவருக்கு பதிலாக துவக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போதைய மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளதால் துவக்க விழா இஷான் கிஷன் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : அவரை மாதிரி தனித்துவ பிளேயர பாத்ததே இல்ல.. சிம்பிளா வேற லெவல் திறமை வெச்சுருக்காரு – இந்திய வீரரை பாராட்டிய மார்க் வாக்

அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான வெளிப்படுத்தி வரும் இஷான் கிஷன் எங்கு களமிறங்கினாலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடுவது மட்டுமின்றி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் விளையாடுவார் என்பது உறுதி.

Advertisement