IND vs AUS : இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட 2 இந்திய வீரர்கள். இந்த வாய்ப்பையும் யூஸ் பண்ணலனா – அடுத்த மேட்ச் காலி

IND
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய கிரிக்கெட் அணியானது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருப்பதினால் தற்போது இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணி தற்போது இந்த தொடரில் ஒன்று பூஜ்யம் (1-0) என்றே கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது செப்டம்பர் 24-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தங்களது திறனை வெளிப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடிக்க பலத்த போட்டி நிலவி வரும் வேளையில் தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு மிக முக்கியமானது. நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் 3 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதேபோன்று அஸ்வினும் பெரிய அளவில் பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்யும் விதமாக பந்துவீசவில்லை. எனவே இம்முறை அவர்கள் இந்த போட்டியில் ஜொலித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : காணாமல் போன தடவல் பேட்டிங்.. மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படுவதற்கான ரகசியம் பற்றி – கேஎல் ராகுல் உற்சாக பேட்டி

அந்தவகையில் இன்றைய இரண்டாவது போட்டியிலும் இவர்கள் இருவரும் சொதப்பும் பட்சத்தில் மூன்றாவது போட்டியில் அவர்களின் இடம் பறிபோகவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement