IND vs AUS : 3வது ஒன்டே நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Chepauk Chennai Cricket Stadium
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறிய இந்தியா அடுத்ததாக அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை 188 ரன்களுக்கு மடக்கிய இந்தியா பேட்டிங்கில் போராடி – ராகுல் – ஜடேஜாவின் உதவியுடன் வென்றது. ஆனால் விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டியில் இந்தியாவை 117 ரன்களுக்கும் சுருட்டி அதை 11 ஓவரில் அடித்து நொறுக்கி வெற்றி கண்ட ஆஸ்திரேலியா 1 – 1* (3) என தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது.

அதனால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2வது போட்டியில் அசந்த நேரம் பார்த்து அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க போராட உள்ளது. அதற்கு பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக இருக்கும் நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் பெரிய ரன்களை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

சேப்பாக்கம் மைதானம்:
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்போட்டி மார்ச் 22ஆம் தேதியன்று தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னையின் சேப்பாக்கம் நகரில் இருக்கும் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 1916இல் தோற்றுவிக்கப்பட்டு 1934 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானத்தில் தான் இந்தியா வரலாற்றில் தனது முதல் வெற்றியை 1951/52இல் பதிவு செய்தது.

1. தற்போது 40000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 1987 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரலாற்றில் இங்கு நடைபெற்ற 22 ஒருநாள் போட்டிகளில் 13இல் விளையாடியுள்ள இந்தியா 7 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்துள்ளது. 1 போட்டி மழையால் முடிவின்றி போனது. 9 பொதுவான போட்டிகளில் இதர அணிகள் வென்றன.

- Advertisement -

1. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மேலும் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1987இல் 1 ரன்னில் தோற்ற இந்தியா கடைசியாக கடந்த 2017இல் 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த மைதானத்தில் ராசியை போல ஆஸ்திரேலியா மொத்தமாக பங்கேற்ற 5 ஒருநாள் போட்டிகளில் 4 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது.

2. இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (401) மற்றும் அதிக சதங்கள் (2) அடித்த வீரராக முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி திகழ்கிறார். அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் : சயீத் அன்வர் – 194, இந்தியாவுக்கு எதிராக, 1997.

- Advertisement -

3. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரராக வங்கதேசத்தின் முகமது ரஃபீக் (8) உள்ளார். சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர் : ரவி ராம்பால் – 5/15, இந்தியாவுக்கு எதிராக, 2011.

பிட்ச் ரிப்போர்ட்:
சேப்பாக்கம் மைதானம் வரலாற்றில் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக தற்போது தமிழகத்தில் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலை நிலவுவதால் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் பந்துகளால் அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள். அதே போல் போட்டி நடைபெறும் நடைபெற ஸ்பின்னர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். எனவே ஆரம்பகட்ட சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செட்டிலாகி விளையாடும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடிக்கலாம்.

- Advertisement -

இங்கு வரலாற்றில் நடைபெற்று முடிந்த ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் சராசரி ஸ்கோர் 259 ஆகும். ஆனால் போட்டி நடைபெற நடைபெற பிட்ச் மெதுவாக மாறும் என்பதால் 2வது இன்னிங்ஸில் சேசிங் செய்வது கடினமாகும். அதனாலேயே இங்கு 231 என்ற சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 2வது இன்னிங்ஸில் 218 ரன்களாக குறைகிறது. அதன் காரணமாகவே இங்கு வரலாற்றில் 13 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் 8 போட்டிகளில் சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை எடுப்பது வெற்றியை உறுதியாக்கலாம்.

இதையும் படிங்க: IND vs AUS : கடைசி போட்டியில் தோற்றால் இந்திய இழக்கப்போவது தொடரை மட்டுமல்ல – இன்னொரு விஷயமும் இருக்கு

வெதர் ரிப்போர்ட்: இப்போட்டி நாளன்று சென்னையில் மழைக்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement