IND vs AUS : வேர்ல்டுகப் வரப்போகுது இந்த நேரத்தில் இப்படியா சொதப்புவீங்க. ரசிகர்களின் கேலிக்கு ஆளான – 3 இந்திய வீரர்கள்

Shreyas-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது மொஹாலி நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 276 ரன்களை குவித்தது. பின்னர் 277 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது.

- Advertisement -

கிட்டத்தட்ட தற்போது வெற்றியினை நோக்கி இந்திய அணி மிகச் சிறப்பாக நகர்ந்து வந்தாலும் இந்த போட்டியில் இந்திய வீரர்களின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

ஏனெனில் இந்த போட்டியின் போது ஆரம்ப கட்டத்திலேயே ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் கொடுத்த எளிதான கேட்ச்சை இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கோட்டை விட்டார். அதேபோன்று ஷர்துல் தாக்கூரும் பவுண்டரி லைனில் ஓடுவதிலேயே சிரமப்பட்டார்.

- Advertisement -

அதோடு பந்துவீச்சின் போதும் அசவுகரியங்களை சந்தித்தார். மேலும் கே.எல் ராகுல் கீப்பிங்கில் பல பந்துகளை தவறவிட்டார். இப்படி உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இந்திய அணியின் பீல்டிங் குறைபாடுகள் அப்பட்டமாக இந்த போட்டியின் போது தெரிந்தது.

இதையும் படிங்க : IND vs AUS : கபில் தேவுக்கு அடுத்து நான் தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கெத்து காட்டிய – முகமது ஷமி

இப்படி வேர்ல்டு கப் அருகில் வரும் போது பீல்டிங்கில் உச்சகட்ட பார்மில் இருக்க வேண்டிய நீங்கள் இப்படி சொதப்புவது எந்த நிலைக்கு அணியை தள்ளப்போகிறதோ என்று ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement