என்னங்க இது எல்லாமே டெம்ப்ரவரி தானா? ஐ.சி.சி மீது இந்திய வீரர்கள் அதிருப்தி – நாங்க எப்படி விளையாடுறது?

IND
- Advertisement -

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து ஜூன் மாதம் இறுதிவரை நடைபெற இருக்கிறது. இம்முறை இந்த டி20 உலககோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் என்று ஏற்கனவே ஐசிசி அறிவிப்பை வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து முடித்து தற்போது இந்த உலகக் கோப்பை தொடரானது துவங்க இருக்கிறது.

இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருக்கும் வேளையில் இந்திய அணியானது ஏ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக நியூயார்க் நகரில் மோதுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நியூயார்க் சென்றடைந்த இந்திய அணியானது பயிற்சி செய்வதில் சிரமம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டி20 உலககோப்பை தொடருக்காக நியூயார்க், டெல்லாஸ், ப்ளோரிடா ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுதவிர்த்து பயிற்சி செய்வதற்காகவும் சில மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்துமே தற்காலிகமாக ஏற்பாடுகளாக மட்டுமே உள்ளன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் நான்கு நாட்களாக தங்கி வரும் இந்திய அணியின் வீரர்கள் சிரமத்துடனே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வரும் கேண்டியாக் பார்க் பகுதியில் முறைப்படி எந்த வசதியும் தங்களுக்கு இல்லை என்றும் தங்கியிருக்கும் இடத்திற்கும் பயிற்சி செய்யும் மைதானத்திற்கும் இடையே நீண்ட தூரம் இருப்பதாகவும் அதே போன்று மைதானமும் முழுவதுமாக முழு வசதிகளுடன் இல்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : பாண்டியாவால் தான் பேலன்ஸ் பாழாகுது.. அந்த 2 வீரர்களை எடுத்துருக்கலாம்.. முன்னாள் தமிழக வீரர் அதிருப்தி

அதோடு எல்லாமே தற்காலிக ஏற்பாடாக தான் உள்ளது. எங்குமே நிரந்தரமான ஒரு வசதி இல்லை என்றும் இந்த தொடரை இங்கு நடத்த திட்டமிட்ட ஐசிசி மீது இந்திய வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement