- Advertisement -
இந்திய கிரிக்கெட்

WTC Final : போட்டியின் மூன்றாம் நாளன்று சுப்மன் கில்லுக்கு ப்ரபோஸ் செய்த ரசிகை – வைரலாகும் புகைப்படம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது கடந்த ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களையும் குவித்தனர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 296 ரன்களை குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அஜின்க்யா ரஹானே 89 ரன்களையும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களும் குவித்தனர். பின்னர் 173 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிசை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியானது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை குவித்துள்ளது.

இதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ரசிகை ஒருவர் மைதானத்தில் சுப்மன் கில்லை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அதனை ஒரு பேனர் மூலம் காண்பித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு மாசம் எந்த மேட்ச்சும் இல்ல – தள்ளிப்போன ஆப்கன் தொடர், ஃபைனலுக்கு பின் இந்தியாவின் அடுத்த தொடரின் அட்டவணை இதோ

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் தற்போது உச்சகட்ட பார்மில் அசத்தி வருகிறார். அதோடு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரிலும் அவர் 890 ரன்கள் அடித்து ஆரஞ்சி தொப்பியை கைப்பற்றியுள்ளார். தனது கரியரின் உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by