207/3 டூ 261க்கு ஆல் அவுட்.. 2க்கு 2.. ப்ரதிகா உலக சாதனை.. மகளிர் முத்தரப்பு தொடரில் தெ.ஆ’வை சாய்த்த இந்தியா

IND vs RSA W
- Advertisement -

இலங்கை மண்ணில் இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 29ஆம் தேதி இந்தியா தங்களுடைய இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 83 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 36 (34) ரன்னில் அவுட்டனார். அவருடன் சேர்ந்து விளையாடிய ப்ரதிகா ராவல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

ப்ரதிகா உலக சாதனை:

இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அவர் 78 (91) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். சமீபத்தில் அறிமுகமான அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 8 இன்னிங்சில் 572 ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 500 ரன்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையை ராவல் படைத்துள்ளார்.

இதற்கு முன் இங்கிலாந்து வீராங்கனை சார்லட் 9 இன்னிங்ஸில் 500 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஹர்லீன் தியோல் 29, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 41 ரன்கள் அசத்தினார்கள். இறுதியில் ஜெமிமா ரோட்டரிகஸ் அதிரடியாக 41 (32), ரிச்சா கோஸ் 24 (14) ரன்கள் எடுத்தார்கள். அதனால் 50 ஓவரில் இந்தியா 276/6 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

2க்கு 2 அபார வெற்றி:

தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிகபட்சமாக எம்ல்பா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய தென்னாபிரிக்க அணியை 49.2 ஓவரில் 261 ரன்களுக்கு சுருட்டி இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. கேப்டன் லாரா 43, டஸ்மின் பிரிட்ஸ் சதத்தை அடித்து 109 ரன்கள் அடித்ததால் ஒரு கட்டத்தில் 207/3 என தென்னாப்பிரிக்கா வலுவான துவக்கத்தைப் பெற்றது.

இதையும் படிங்க: 100 கிலோமீட்டர் பயணம்.. 4 ஆண்டு தொடர்ந்த முயற்சி.. வைபவ் சூர்யவன்ஷிக்காக – அவரது அப்பா எடுத்த ரிஸ்க்

ஆனால் அதன் பின் அபாரமாக பௌலிங் செய்த இந்திய பவுலர்கள் லாரா குட்டால் 9, கரெபோ மெசோ 7, சுனே லாஸ் 28, சோலே ட்ரியன் 18, அனேரி டெர்க்சன் 30 என அடுத்து வந்த வீராங்கனைகளை சொற்ப ரன்களில் காலி செய்தனர். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஸ்னே ராணா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த வகையில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா இத்தொடரின் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

Advertisement