சென்னை அணி கடந்த பல வருடங்களில் போல இந்த வருடமும் அதிக அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. போட்டிகளில் வெற்றிகள் மூலம் வீரர்கள் தனிப்பட்ட செயல்கள் மூலமும் ரசிகர்களின் ஈர்ப்பை பெற்று வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக வெளிநாட்டு வீரர்களான பிராவோ, வாட்சன் மற்றும் தாஹிர் போன்றோர் இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்நிலையில் தாஹிர் டெல்லி அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாட தமிழில் அஜித் குமார் பேசியவாறு டயலாக் ஒன்றை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் தாஹிர் குறிப்பிட்டவை :எங்களோட சென்னை ஐபிஎல் வாழ்க்கையில ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும், ஏன் ஒவ்வொரு பாலும் நாங்களா செதுக்கினதுடா எட்றா வண்டிய போடுற விசில் என்று பதிவிட்டுள்ளார். இந்த வரிகள் பில்லா 2 படத்தில் அஜித் பேசிய வசனம் போன்றே உள்ளது.
Yengaloda @ChennaiIPL vazhkaila ovvoru ipl m , ovvoru match m , ovvoru over m yen ovvoru ball m nangala sethukinathu da #eduda vandiya poduda whistle
— Imran Tahir (@ImranTahirSA) May 10, 2019
மேலும், இவர் விக்கெட் எடுத்த உடன் கையை நீட்டிக்கொண்டு மைதானம் முழுவதும் ஓடி தனது வெற்றிகொண்டாட்டத்தினை பகிர்வார். இதனால் இவருக்கு பராசக்தி என்ற பெயரும் சென்னையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது