CSK vs MI : இந்த வயதில் எனக்கு விளையாட வாய்ப்பளித்த இவர்களுக்கு நன்றி – இம்ரான் தாஹிர் நெகிழ்ச்சி

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்

Tahir 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

MI

போட்டி முடிந்து பேசிய இம்ரான் தாஹிர் கூறியதாவது : உண்மையில் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த வயதில் எனக்கு வாய்ப்பளித்த சென்னை அணிக்கு மிகவும் நன்றி நான் இதே போன்று சிறப்பாக விளையாட ஆசைப்படுகிறேன். இந்த தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது இருந்தாலும் மும்பை அணி இந்த வெற்றியை அடைய தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.

Tahir

என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் கடைசி நாட்களில் நான் இப்போது சிறப்பான வீரராக உணர்கிறேன். இந்த தொடர் சிறந்த தொடர் மேலும் நான் பங்கேற்றதிலேயே எனக்குத் தெரிந்து இதுவே என் மனதிற்கு நெருக்கமான தொடராக நினைக்கிறேன். இந்தியாவில் பந்து வீசுவது சாதாரணமானது இல்லை இங்கு விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் நான் மிகவும் ஆசைப்பட்டு விளையாடுகிறேன். இதேபோன்று என்னால் முடிந்த வரை நான் விளையாட ஆசைப்படுகிறேன் என்று இம்ரான் தாஹிர் கூறினார்

Advertisement