சி.எஸ்.கே அணிக்காக விளையாடிய போட்டிகளை என் வாழ்நாளில் மறக்க முடியாதவை – சி.எஸ்.கே வீரர் நெகிழ்ச்சி

csk
- Advertisement -

ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 8 அணிகள் தற்போது வரை நிலைத்து நின்று ஆடி வருகிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த அணிகளில் அனைத்திலும் வித்தியாசமானது. மாற்ற அணிகள் எல்லாம் வியாபார நோக்கில் தனது வீரர்களை நடத்த, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் வீரர்களின் நலன், நம்பிக்கை போன்றவற்றை வைத்து அணியை நடத்தி வருகிறது.

csk

- Advertisement -

அந்த அணியின் ஒவ்வொரு வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பற்றி பேசும்போது சிலாகித்துப் பேசி பதில் கொடுப்பார்கள். இப்படித்தான் சமீபத்தில் ஹர்பஜன்சிங் மும்பை இந்தியன்ஸ் அணி தொழில் முறையான அணி, ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை நம்பும் அணி என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் இது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அனைவரும் குழுவாக இணைந்து விளையாடுவோம். நாங்கள் ஒரு குடும்பமாக எப்போதும் இருப்போம். எனக்கு மட்டுமின்றி எனது குடும்பத்தினருக்கும் சென்னை அணி மிகவும் நெருக்கமான அணியாகும்.

Tahir-2

சென்னை அணி வெளியிட்ட பாடலை எனது மகன் மைதானத்திலிருந்து எப்போதும் பாடிக் கொண்டே இருப்பான். அவனுக்கு அந்த பாடல் அந்த அளவிற்கு பிடிக்கும்.2018 ஆம் ஆண்டு பேருந்தில் நாங்கள் கூரையின் மீது அமர்ந்து பயணம் செய்தோம். அப்போது சென்னை ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்த வரவேற்பு அலாதியானது.

- Advertisement -

அதனைக்கண்டு நான் அசந்து விட்டேன். இதற்கு முன்னதாக இப்படி ஒன்றை நான் பார்த்ததே இல்லை. இது ஒரு குடும்பம் என்று தெரிவித்துள்ளார் இம்ரான் தாஹிர். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் சென்னை ரசிகர்களால் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னை அணியில் விளையாடிய பல வீரர்கள் சென்னை அணி குறித்து பெருமையாக பேசிவரும் வேளையில் தாஹிரும் சென்னை அணியை புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tahir

எப்பொழுதும் ரசிகர்களுக்கு பிடித்த அணியாக மட்டுமல்லாமல் வீரர்களுக்கு பிடித்த அணியாகவும் சென்னை அணி வருகிறது. மேலும் ஐ.பி.எல் வரலாற்றில் சி.எஸ்.கே என்பது ஒரு தவிர்க்க முடியாத அணியாகவும் திகழ்ந்து வருகிறது.

Advertisement