உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோற்க இதுவே காரணம் – பாக் வீரர் பேட்டி

Imam-1
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி எப்போது நடைபெற்றாலும் தனிப்பட்ட பகையுடன் மோதிக்கொள்ளும் இரு அணிகளை போன்று பலமான போட்டி நடைபெறும். இப்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அதிக பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் போட்டியாக அமையும். கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு தொடர் நடைபெறுவதில்லை.

Pak

- Advertisement -

ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இரு அணிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை நடைபெற்றுள்ள ஐசிசி தொடர்களின் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை உலக கோப்பை தொடர்களில் ஒருமுறை கூட வீழ்த்த முடியவில்லை. இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 7 முறை உலகக் கோப்பை தொடரின் போது நேருக்கு நேர் மோதி உள்ள நிலையில் அந்த 7 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் உலகக்கோப்பை தொடர்களில் 5 முறை நேருக்கு நேர் விளையாடி 5 முறையும் இந்திய அணியே வென்றுள்ளது. இந்நிலையில் இப்படி உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து இந்திய அணியிடம் தோற்க காரணம் என்ன என்பது குறித்து அந்த அணியின் முன்னணி வீரரான இமாம் உல் ஹக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Pak

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை இதன் காரணமாகத்தான் உலக கோப்பை தொடரின் போது முக்கிய ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி விடுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கின்றனர். அதனால் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் எவ்வாறு விளையாடுவது என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் பாகிஸ்தான் அணியில் உலகக்கோப்பை தொடர்களில் பெரும்பாலோனோர் இளம் வீரர்கள் என்பதனால் அந்த அழுத்தத்தை அவர்கள் எதிர்கொள்ள கஷ்டப்படுகிறார்கள். இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வி அடைகிறது. வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் நிச்சயம் பாக்கிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தும் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement