மோதி பாப்போம்.. இங்கிலாந்திடம் பஸ்பால் இருந்தா.. எங்கிட்ட அந்த பால் இருக்கு.. கவாஸ்கர் பேட்டி

Sunil Gavaskar
- Advertisement -

ஜனவரி 25 முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு வரை சொந்த மண்ணில் வெல்வதற்கே தடுமாறிய இங்கிலாந்துக்கு பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றனர்.

அப்போதிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக பேட்டிங் செய்யும் யுக்தியை கையிலெடுத்த இங்கிலாந்து கடந்த 2 வருடங்களில் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே அதே அணுகுமுறையை பயன்படுத்தி 2012க்குப்பின் சொந்த மண்ணில் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வரும் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

- Advertisement -

மோதி பார்ப்போம்:
சொல்லப்போனால் பஸ்பால் எனப்படும் புதிய அணுகுமுறையை வைத்து இம்முறை உங்களை தோற்கடிக்க வருகிறோம் என்று நாசர் ஹுசைன் முதல் ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை இந்தியாவை சமீபத்தில் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்திடம் பஸ்பால் இருந்தால் இந்தியாவிடம் விராட்பால் இருப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதாவது எந்த சூழ்நிலையிலும் அசத்தக்கூடிய விராட் கோலி இந்தியாவிடம் இருப்பதால் இங்கிலாந்தின் சவாலை எதிர்கொண்டு மோதிப் பார்க்க தயாராக இருப்பதாக கவாஸ்கர் கூறியுள்ளார். அத்துடன் இந்திய மைதானங்களில் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டம் செல்லுபடியாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அவர்களிடம் பஸ்பால் இருந்தால் எங்களிடம் விராட்பால் இருக்கிறது. பஸ்பால் இங்கே வேலை செய்யலாம்”

- Advertisement -

“ஏனெனில் சமீபத்திய வருடங்களில் இங்குள்ள மைதானங்களில் பவுண்டரிகளின் அளவு சிறியதாகியுள்ளது. மேலும் தவறான இடத்தில் பட்டால் கூட சிக்ஸர் பறக்கும் அளவுக்கு இப்போதுள்ள பேட்டுகள் வலுவாக தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே பஸ்பால் இங்கே வேலை செய்யலாம்.குறிப்பாக ஸ்பின்னர்கள் வரும் போது அவர்கள் பந்தை தூக்கி அடிக்க முயற்சிக்கலாம். அதனால் அவர்கள் அவுட்டாகவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் எங்களுடைய ஸ்பின்னர்களும் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடி மனதளவில் தயாராக இருக்கின்றனர்”

இதையும் படிங்க: 92க்கு ஆல் அவுட்.. அசத்திய நியூஸிலாந்து.. 7 – 1 புத்தாண்டில் ஒருவழியாக நிம்மதி பெருமூச்சு விட்ட பாகிஸ்தான்

“டி20 கிரிக்கெட்டில் நீங்கள் விக்கெட் எடுக்கிறீர்களா இல்லையா என்பதை விட பவுண்டரி அல்லது சிக்ஸர் கொடுக்கக் கூடாது என்பதே மனநிலையாக இருக்கும். எனவே சிக்ஸர் அடித்தாலும் எங்களுடைய பவுலர்கள் தங்களின் லென்த்தை மாற்றி சண்டையிடுவார்கள். ஹைதராபாத் நகரில் நடைபெறும் முதல் போட்டி முக்கியம். அங்குள்ள மைதானம் வேகம் மற்றும் பவுன்ஸ்க்கு கை கொடுக்கும். எனவே ஸ்பின்னர்களுக்கு எதிராக இங்கிலாந்துக்கு இது நல்ல சோதனையாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement