2 வருடம் தடை, 6 மாதம் சஸ்பென்ட்.. வசமாக சிக்கிய வங்கதேச வீரருக்கு அதிரடி தண்டனை வழங்கிய ஐசிசி

Nassir Hossain
- Advertisement -

கிரிக்கெட்டில் உள்ளூர் முதல் சர்வதேசம் வரை பல்வேறு வீரர்கள் அவ்வப் போது வெவ்வேறு காரணங்களுக்காக தடை பெறுவது வழக்கமாகும். அந்த வரிசையில் தற்போது வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் நாசிர் ஹுசைன் சிக்கியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே 3 வகையான கிரிக்கெட்டிலும் வங்கதேசத்திற்காக விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் 2015 போன்ற காலகட்டங்களில் வங்கதேச அணியின் முக்கிய வீரராக வலம் வந்த அவர் நாளடைவில் சுமாராக செயல்பட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்டார். அதனால் கடைசியாக 2018ஆம் ஆண்டு வங்கதேசத்திற்காக விளையாடி இருந்த அவர் சமீபத்திய வருடங்களாக அந்நாட்டில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

தடை விதித்த ஐசிசி:
அந்த வரிசையில் கடந்த 2021ஆம் ஆண்டு அபுதாபில் நடைபெற்ற டி10 தொடரில் அவர் விளையாடினார். ஆனால் அந்தத் தொடரில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கடந்த 2023 செப்டம்பர் மாதம் ஐசிசி கண்டுபிடித்தது. அந்த தொடரில் நடுவர்கள், 7 எஞ்சிய வீரர்கள் மற்றும் அணி உரிமையாளர்களுடன் சேர்ந்து அவர் பெரிய சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஐசிசி ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளது.

குறிப்பாக சூதாட்டம் செய்ததற்காக 750 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பெற்றதை அவர் ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். அதற்காக நடத்தப்பட்ட விசாரணையின் போது ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் ஒத்துழைப்பு கொடுக்காமலும் அவர் எதிர்மறையாக நடந்து கொண்டுள்ளார். ஆனாலும் இறுதிக்கட்ட விசாரணையில் நசீர் ஹொசைன் தன் மீது வைக்கப்பட்ட புகார்களை ஒப்பு கொண்டதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து அவருக்கு சர்வதேசம் முதல் உள்ளூர் வரை அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அடுத்த 2 வருடங்கள் விளையாடுவதற்கு தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் 2.4.3, 2.4.4, 2.4.6 ஆகிய 3 அடிப்படை விதிமுறைகளை மீறிய அவருக்கு 2 வருட தடை மட்டுமல்லாமல் எக்ஸ்ட்ராவாக 6 மாதங்கள் விளையாடுவதற்கு இடைக்கால தடையும் விதிக்கப்படுவதாக ஐசிசி கூறியுள்ளது.

இதையும் படிங்க: அவருக்கான 2024 டி20 உ.கோ டிக்கெட் பிரிண்ட் ஆகுது.. இளம் வீரரை பாராட்டிய பார்த்திவ் பட்டேல்

அதன் காரணமாக வரும் 2025 ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரை அவரால் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மொத்தத்தில் 115 போட்டிகளில் வங்கதேசத்திற்கு விளையாடிய பெருமை கொண்ட அவர் தற்போது அந்த அனைத்து நன்மதிப்புகளையும் இழந்துள்ளார். இது வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement