ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் தற்போது சிறந்த உலகக்கோப்பை அணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்திய அணியை சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதேவேளையில் கோலி மற்றும் தோனி ஆகியோருக்கு இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.
ஐசிசி அறிவித்துள்ள அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் :
1)ஜேசன் ராய்
2)ரோகித் சர்மா
3)கேன் வில்லியம்சன்
4)சாகிப் அல் ஹசன்
5)ஜோ ரூட்
6)பென் ஸ்டோக்ஸ்
7)அலெக்ஸ் கேரி
8)மிச்செல் ஸ்டார்க்
9)ஆர்ச்சர்
10)பெர்குசன்
11)பும்ரா
இந்தப் பட்டியலில் இந்தியாவின் சார்பாக ரோகித் மற்றும் பும்ராஆகியோர் இடம் பெற்றாலும் முக்கிய வீரர்களான தோனி மற்றும் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் யாதெனில் இந்த தொடரில் ஜேசன் ராய் 7 போட்டிகளில் விளையாடி 443 ரன்களை அடித்துள்ளார். ஆனால் கோலி 9 போட்டிகளில் அதே 443 ரன்களை அடித்ததால் கோலியின் வாய்ப்பை ஜேசன் ராய் பெற்று உலக லெவன் அணியில் இடம்பெற்றார். அதேபோல் தோனி இந்த தொடரில் 273 ரன்கள் மட்டுமே குறித்துள்ளார் ஆனால் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி 375 ரன்கள் குவித்ததால் அவர் உலக லெவன் அணியில் இடம்பிடித்து குறிப்பிடத்தக்கது.