MS Dhoni : தோனி முதுகுவலியோடு ஆடுவாரே தவிர ஓய்வு எடுக்கமாட்டார். அதற்கு இதுதான் காரணம் – மைக் ஹஸ்ஸி பேட்டி

இந்தியாவில் 12 ஆவது ஐ.பி.எல் தொடர் போட்டிகள் இந்தியாவில் நடந்துவருகின்றன. இந்த தொடரில் கடந்த ஆண்டு சாம்பியனான சென்னை அணி இந்த ஆண்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி

Hussey
- Advertisement -

இந்தியாவில் 12 ஆவது ஐ.பி.எல் தொடர் போட்டிகள் இந்தியாவில் நடந்துவருகின்றன. இந்த தொடரில் கடந்த ஆண்டு சாம்பியனான சென்னை அணி இந்த ஆண்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. தோனியின் தலைமையிலான சி.எஸ்.கே அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.

csk

- Advertisement -

முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக சென்னை அணியில் இருந்து விலகினாலும் சென்னை அணி இப்போது வரை சிற்பபாக ஆடிவருகிறது. தற்போது கடந்த சில போட்டிகளாக சென்னை அணியின் கேப்டன் தோனி முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்படுவருகிறார். இந்நிலையில் தோனியின் மனநிலை குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் ஹஸ்ஸி கூறியதாவது : தோனி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு எடுத்துக்கொண்டார். அதன்பின் முதுகுவலியுடன் ஆடிவருகிறார் ஏனென்றால், சென்னை அணி அவருக்கு மிக நெருக்கமான ஒன்றாகும். மேலும், சென்னை அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுத்தர விரும்புகிறார். அதனால் அவர் அனைத்து போட்டிகளிலும் சி.எஸ்.கே அணிக்காக விளையாட விரும்புகிறார்.

Dhoni

சி.எஸ்.கே அணியின் மீது உள்ள தனிப்பட்ட விருப்பமே அவரை சி.எஸ்.கே அணிக்காக இவ்வளவு அர்ப்பணிப்புடன் விளையாட வைக்கிறது என்று மைக் ஹஸ்ஸி கூறினார். இதனால் சி.எஸ்.கே அணிக்காக இவ்வளவு அர்ப்பணிப்புடன் ஆடும் தோனி இந்திய அணிக்காகவும் இப்படி ஆடவேண்டும் என்று தோனி எதிர்ப்பாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement