இந்த வருட ஐ.பி.எல் சாம்பியன் இவங்கதான் அடித்துக்கூறிய பிராட் ஹாக் – விவரம் இதோ

Hogg
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக பலமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது பல சிக்கல்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து விட்டன.

Dubai

- Advertisement -

மேலும் தற்போது பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் ? எந்த அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்தது ? எந்த அணி பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணி ? சிறப்பாக விளையாட இருக்கும் பேட்ஸ்மேன் யார் ? சிறப்பாக விளையாட இருக்கும் பவுலர் யார் ? என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை பல முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் அணி குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் இந்த வருடம் ஐபிஎல் தொடரை சென்னை அல்லது மும்பை அணி இந்த இரண்டில் ஒன்றே கைப்பற்றும் என்று கூறிவரும் நிலையில் தற்போது இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் அணி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

hogg

நிச்சயம் இந்த வருடம் கோப்பையை கைப்பற்றும் அணியாக எனது முதல் கணிப்பு பெங்களூரு அணி. இரண்டாவதாக மும்பை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பெங்களூரு அணி பல அதிரடி வீரர்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு முறையும் பெங்களூரு அணி சிறப்பாக இருந்தும் ஒரு சில காரணங்களால் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை ஆனால் இம்முறை நிச்சயம் கைப்பற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

rcb

ஏற்கனவே பல ஆண்டுகளாக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி தொடர்ந்து தோல்வியடைந்தே வருகிறது. இந்நிலையில் இந்த வருடமாவது கோப்பையை கைப்பற்றுமா ? என்றும் பெங்களூரு அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த ஆண்டு பெங்களூரு அணி சற்று பலமான அணியாக பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement