மொதல்ல உங்க டீமை சரிபடுத்துங்க. அப்புறம் இந்திய அணியை பத்தி பேசலாம் – ரணதுங்காவுக்கு பதிலடி கொடுத்த ஹாக்

Hogg
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்றடைந்துள்ளது. இந்த தொடருக்கு கேப்டனாக தவானும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் செயல்பட உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்பதனையும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

dravid

இந்நிலையில் இந்த இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட அணி என்கிற காரணத்தினால் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான அர்ஜுன ரணதுங்கா அளித்த பேட்டியில் தற்போது இலங்கைக்கு வந்துள்ள இரண்டாம் தர அணி இங்கு இங்கு வந்து விளையாடுவது எங்கள் அணியை அவமதிப்பது போன்ற ஒரு செயலாகும். ஏனெனில் முதன்மை அணியை தவிர்த்து இரண்டாம் கட்ட அணியை எங்களுடன் விளையாட வைத்து அவர்கள் வருமானம் பார்க்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் இந்திய பி அணியோடு தற்போது இலங்கை அணி விளையாடுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய அணியை விமர்சித்து பேசியிருப்பது பலரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் கூறுகையில் : இலங்கையில் உள்ள இந்திய அணியை பார்க்கும்போது அது இரண்டாம் தர அணி போன்று எனக்கு தெரியவில்லை.

நிச்சயம் உலகின் எந்த ஒரு அணிக்கும் சவால்விடும் வகையில் தான் தற்போதைய இந்திய அணி இருக்கிறது. இதில் இலங்கை புகார் கூறும் அளவிற்கு ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என அதிரடியாக தனது பதிலை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த தொடரில் இலங்கைக்கு தான் சிக்கல் என்றும் டி20 மற்றும் ஒருநாள் தொடரை இரண்டையும் இந்திய அணி எளிதாக வென்று விடும் என்றும் கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது ஆதரவு பெருகி வருகிறது. மேலும் இலங்கை அணி தற்போது உள்ள நிலைமையைப் பார்த்து முதலில் உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் என்றும் அதன் பிறகு இந்திய அணியை குற்றம் சாட்டலாம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் ஜூலை 13-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement