ஐபிஎல் 2023 ரிட்டன்ஷன் : ஜடேஜாவை கைப்பற்றி 4 முக்கிய வீரர்களை கழற்றி விட்ட சிஎஸ்கே – புதிய பட்டியல் இதோ

CSK MS Dhoni Ravindra Jadeja
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் இந்த வருடம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் 16வது சீசனை நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. குறிப்பாக இந்த வருடம் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய அணிகள் உருவாக்கப்பட்டதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு அதற்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்க மெகா ஏலம் கடந்த பிப்ரவரியில் 2 நாட்கள் நடைபெற்றது. அதன் காரணமாக வரும் 2023இல் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்முறை வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலமாக சிறிய அளவில் நடைபெறுகிறது.

CSK-Auction

- Advertisement -

அதில் ஏற்கனவே கைவசம் வைத்துள்ள மீத ஏலத் தொகையில் எக்ஸ்ட்ராவாக 5 கோடிகளை பயன்படுத்திக்கொள்ள பிசிசிஐ அனுமதி கொடுத்துள்ளது. அத்துடன் அந்த ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஏலத்துக்கு முன்பாக தங்களது இறுதிக்கட்ட அணியை தீர்மானிக்கும் வேலையில் முமுரமாக ஈடுப்பட்டு வருகின்றன.

சென்னை அணி:

அந்த வகையில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னைக்கு இந்த வருடம் மோசமாக அமைந்ததால் சுமாராக செயல்பட்ட வீரர்களை கழற்றிவிட முடிவெடுத்துள்ளது. அதை விட அடுத்த தலைமுறை கேப்டனை உருவாக்குவதற்காக இந்த வருடம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங், ஃபீலிங் என அனைத்திலும் பார்மை இழந்து திணறினார். மேலும் அவரது தலைமையில் சென்னை அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்ததால் அழுத்தமான கேப்டன்ஷிப் பதவியே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே வழங்கினார். இறுதியில் காயத்தால் வெளியேறிய அவருக்கும் சென்னைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் அடுத்த வருடம் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியானது.

Jadeja

அதற்கேற்றார் போல் சென்னை சம்பந்தமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜடேஜா டெலீட் செய்ததால் அவர் வெளியேறப் போவதாக ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனாலும் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த சென்னை நிர்வாகம் தங்களது அணியில் ஜடேஜா விளையாடுவார் என்று கூறியது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐபிஎல் 2023 தொடரில் முக்கிய வீரராக ரவிந்திர ஜடேஜா சென்னை அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்பாக தனது கேரியரின் கடைசி கிரிக்கெட் போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்த கேப்டன் தல தோனி வழக்கம் போல முதல் வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்த வருடம் படுதோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்த இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டானை அந்த அணி நிர்வாகம் கழற்றி விட முடிவெடுத்துள்ளது. அவருடன் காயத்தால் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நியூசிலாந்தின் ஆடம் மில்னேவையும் ஏற்கனவே ஜடேஜா இருப்பதால் பெரும்பாலும் வாய்ப்புகளை பெறாமல் பெஞ்சில் அமர்ந்து வரும் மிட்சேல் சாட்னரையும் விடுவிக்க முடிவெடுத்துள்ள சென்னை நிர்வாகம் தமிழக வீரர் நாராயன் ஜெகதீசனையும் விடுவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

CSK Ms DHoni

அவர்களை தவிர்த்து இந்த வருடம் அசத்திய டேவோன் கான்வே, முகேஷ் சௌத்ரி, காயத்தால் பங்கேற்காத தீபக் சஹர் உள்ளிட்ட முக்கிய வீரர்களை மீண்டும் சென்னை அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளது. மொத்தத்தில் ஐபிஎல் 2023 தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக சென்னை தக்க வைத்துள்ள 9 வீரர்களின் பட்டியல் இதோ: எம்எஸ் தோனி, ரவீந்திரர் ஜடேஜா, மொயின் அலி, சிவம் துபே, ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே, முகேஷ் சௌத்ரி, ட்வயன் பிரிட்டோரியஸ், தீபக் சஹர்.

கழற்றிவிட முடிவெடுத்துள்ள 4 வீரர்களின் பட்டியல்: ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், மிட்சேல் சாட்னர், நாராயன் ஜெகதீசன்.

Advertisement